Friday, May 24, 2019

Introduction - D2H Story



கணவனிடமிருந்து பிரிந்துவந்த வாழ்வில் விரக்தியடைந்த இளம்பெண், இறைஞானம் பெற்ற ஒருவரால் வழிகாட்டப்பட்டு, விழிப்புணர்வுடன் வாழும் வழியைக் கற்றுக்கொண்டு, மீண்டும் கணவனோடு சேரும் கதையைச் சொல்லும் குறுநாவல் இது.

குடும்பத்திலும் சமூகத்திலும் அலுவலகத்திலும் நாம் தினந்தோறும் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நாம் பெறும் இறையுதவிதான், நம்முடைய வாழ்க்கை அனுபவத்தரத்தை நிர்ணயிக்கிறது. மூன்றே மூன்று ஆன்மீகத் தத்துவங்களைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையில் செயல்படுத்தினால் போதும், அந்த கிடைத்தற்கரிய இறையுதவியைப் பெறுவதற்கு. அதை விதிகளாகச் சொல்வதைவிட, ஒரு கதையின் பின்புலத்தில் விளக்கினால், இன்னும் எளிதாகப் புரியும் என்று நான் நினைத்து இந்தக் கதையை எழுதினேன்.

இம்மூன்று தத்துவங்களும் ஆன்மீகத் தத்துவங்களாதலால், மதங்களுக்கு அப்பாற்பட்டவை. நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும் சரி, அல்லது எந்த ஒரு மதத்தையும் சேராதவராக இருந்தாலும் சரி, இம்மூன்று ஆன்மீகத் தத்துவங்களையும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவதில் எந்த ஒரு தடையுமில்லை.

இக்கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. ஆனால், இக்கதையில் விவாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்மீகத் தத்துவங்களும் உண்மையானவை; நிஜ வாழ்க்கையில் கடைபிடித்தால் பயன்தரக்கூடியவை.

இது ஒரு குறுநாவல். மொத்தம் பதினாறு அத்தியாயங்கள். சுமார் ஒரு மணி நேரத்தில் முழு நாவலையும் வாசித்துவிடலாம்.

நாவலின் அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு, கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும். அத்தியாயங்களின் லிங்க்ஸ், கீழிருந்து மேலாக முதல் அத்தியாயத்திலிருந்து பதினாறாவது அத்தியாயம் வரை கொடுக்கப்பட்டிருக்கிறன.

NOTE: English Version of this Story is available for free reading on Wattpad - https://www.wattpad.com/story/176571208-despair-to-hope-completed

Thursday, May 23, 2019

Chapter 16 of 16 - D2H Story


*அத்தியாயம் 16*


ராமன் சற்று கவலையுடன் காணப்பட்டார். அவர் என்னிடம், “ஒருவேளை சென்னை வீட்டில இவள் எதுனாச்சும் செஞ்சிட்டான்னா?” என்று ஆதங்கப்பட்டார்.

Chapter 15 of 16 - D2H Story


*அத்தியாயம் 15*


“அனிதா என்ன சொன்னா கார்த்திக்?”


அது அந்த வாரத்தின் சனிக்கிழமை. கீதா பிரியாவைப் பார்க்க, சென்னைக்குப் போயிருந்தாள். அது மதிய உச்சிவேளை. நாங்கள் என் வீட்டின் பக்கவாட்டு வெளிமுற்றத்தில் இருந்த ஒரு மாமரத்தின் கீழ், நிழலில் சேர்கள் போட்டு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். கார்த்திக் நேற்று இரவு அனிதாவைப் பார்க்க வந்திருந்தான். அவள் இன்று காலை, என்னிடம் போனில் தகவல் தெரிவித்துவிட்டு, கார்த்திக்கை இங்கு அனுப்பியிருந்தாள்.


“வேற ஒண்ணும் சொல்லலை. உங்களப் பாத்துட்டு வரச் சொன்னா.” கார்த்திக் சோர்வுடன் காணப்பட்டான். அவன் தயங்கித் தயங்கி, கூசிக் கூசிப் பேசினான்.

Chapter 14 of 16 - D2H Story


*அத்தியாயம் 14*


வானில் சுக்கிரன் மாமரத்தின் இலைகளுடன் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தது. அனிதா தன் சேரைத் தொண்ணூறு டிகிரி திருப்பி, என்னை நேராகப் பார்க்கும்படி போட்டுக்கொண்டாள். நான் தொடர்ந்தேன்.


“அவன் உன்னோட சுதந்திரத்தப் பறிச்சுக்கிட்டான். நீ அத தியாகம்னு எடுத்துக்கிட்ட. உன்னய, அவன நம்பி இருக்க வச்சான். அப்பறம், நீ அவனோட சுதந்திரத்தப் பறிச்சுக்கிட்ட. அத அவன் இம்சையா நினைக்க ஆரம்பிச்சான்.”

“பிறகு?”

“அவன் தன்னோட சுதந்திரத்தப் பறிக்காத ஒருத்தியத் தேட ஆரம்பிச்சான்.”

Chapter 13 of 16 - D2H Story


*அத்தியாயம் 13*


“தியாகம் அன்பிலிருந்து வருகிறது. ஆனால், அன்பு தியாகத்தை நம்பி இல்லை.” நான் அனிதாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.


அது பிப்ரவரியின் நடுவாரத்தில் ஒரு புதன்கிழமை. கீதா எனக்கு வலப்பக்கமும் அனிதா எனக்கு இடப்பக்கமுமாக, நாங்கள் மூவரும் எங்கள் வீட்டின் முன்வெளி முற்றத்தில் சேர்களில் முக்கோணமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மாலை ஆறு மணி இருக்கும். இருட்டி இருந்தது. அனிதா இங்கு வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.

Chapter 12 of 16 - D2H Story


*அத்தியாயம் 12*


“அந்த கம்ப்யூட்டர் படிப்பில் இன்னம் ஆர்வம் இருக்கா?” நான் அனிதாவைக் கேட்டேன்.


அது செவ்வாய் இரவு. எங்கள் வீட்டில் இரவு உணவு முடித்துவிட்டு, அனிதாவை அவள் வீட்டுக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தேன். சாலையின் இருபுறமும் நின்ற சோடியம் தெருவிளக்குகள், சாலையில் மஞ்சள் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சின. ஒரு சில வாகனங்களே சாலையில் சென்றுகொண்டிருந்தன.

Chapter 11 of 16 - D2H Story


*அத்தியாயம் 11*


ஆசிரமத்தை ஒட்டியிருந்த நடைமேடையில் திரும்பவும் சாலையைப் பார்த்து இருவரும் உட்கார்ந்து கொண்டோம். சாதாரணமாக, ஆத்மஞான செயல்விளக்க அனுபவமே பலருக்கும் புரிந்துகொள்ள முடியாத ஓர் ஆன்மீக நிகழ்வு. அதன் பின் இருக்கும் ஆன்மீக அறிவியலைப் புரிந்துகொள்வது என்பது, மிக மிகக் கடினமானது. இருந்தாலும், அனிதா அதீத புத்திகூர்மையுடன் வலது மூளையைப் பயன்படுத்தி சிந்திக்கும் திறமை வாய்ந்தவள் என்பதால் நான் விளக்க முடிவுசெய்தேன்.

Chapter 10 of 16 - D2H Story



*அத்தியாயம் 10*


“நேத்து நைட்டு அப்பா என்ன சொன்னாரு, அங்கிள்?”

நான் ஒரு தடவை அனிதாவைப் பார்த்துவிட்டு, மிருதுவான குரலில் கேட்டேன், “அவசியம் நீ தெரிஞ்சுக்கணுமா?”

அவள் கீழே ரோட்டைப் பார்த்துக்கொண்டே பேசினாள். “நான் தெரிஞ்சுக்கலாம்னு அங்கிள் நினைச்சா.”


நாங்கள் பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தின் வெளியே இருந்த நடைமேடையில் உட்கார்ந்திருந்தோம். கீதா எங்களுடன் வரவில்லை. தாமதமாக காலை உணவு முடித்துக்கொண்டு, நெய்வேலியிலிருந்து புறப்பட்டோம். அங்கே வந்து சேர்ந்தபோது, ஆசிரமம் மதிய உணவு இடைவேளைக்காக மூடப்பட்டிருந்தது. இருவருக்குமே பசி இல்லை. அதனால், ஆசிரமத்தின் வெளியே இருந்த நடைமேடையில் உட்கார்ந்து கொண்டோம்.

Chapter 09 of 16 - D2H Story


*அத்தியாயம் 09*


“நீங்க என்ன நினைக்கிறீங்க?” ராமன் என்னைக் கேட்டார்.


நாங்கள் என் வீட்டின் திறந்தவெளி முன்முற்றத்தில் சேர்களைப் போட்டு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். கீதா அனிதாவை அருகிலிருந்த கடை ஒன்றுக்குக் கூட்டிச் சென்றிருந்தாள். அது மாலை ஏழு மணி என்பதால் ரோட்டில் டிராபிக் கொஞ்சம் இருந்தது. ராமனின் முகம் சோர்ந்தும் வருத்தமாகவும் காணப்பட்டது.

Chapter 08 of 16 - D2H Story


*அத்தியாயம் 08*


நான் என்னுடைய ஆன்மீக நிலையை அனிதாவிடம் விளக்க விரும்பவில்லை. ஆனால், சொல்வதற்கு அவள் வலியுறுத்திக் கொண்டிருந்தாள். சூரியன் வானத்தின் உச்சிக்குப் பயணித்துக் கொண்டிருந்தது. ஒரு சில பக்தர்களே அந்த திறந்தவெளி முற்றத்தில் காணப்பட்டனர்.

Wednesday, May 22, 2019

Chapter 07 of 16 - D2H Story


*அத்தியாயம் 07*


“... அப்படி ரமணர் சிறுவனாக இருக்கும்போதே இங்கு வந்து தியானம் செய்துகொண்டிருப்பார். சிவப்பு எறும்புகள் எல்லாம் அவர் கால்களில் ஏறிக் கடிக்கும். அதை எதையும் பொருட்படுத்தாமல் அவர் தியானத்தில் மூழ்கியிருப்பார் ...” சன்னதி குருக்கள் ரமணர் கதையை சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். நான் அந்த சம்பவங்கள் எல்லாம் முன்னமே புத்தகத்தில் வாசித்திருக்கிறேன். ஆனால், அனிதா கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்தாள். நான் குருக்களின் கதை சொல்லும் நேர்த்தியை ரசித்துக்கொண்டிருந்தேன்.

அது திங்கட்கிழமை காலை. நாங்கள் திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலில் பாதாள லிங்க சன்னதியில் நின்றுகொண்டிருந்தோம்.

நான் இரண்டு நாட்கள் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்திருந்தேன். கீதா சுவேதா வீட்டுக்குச் செல்ல விரும்பினாள். காலை உணவு முடித்ததும் நாங்கள் நெய்வேலியிலிருந்து கிளம்பிவிட்டோம். அங்கிருந்து ஒண்ணரை மணிநேர டிரைவ்.

Tuesday, May 21, 2019

Chapter 06 of 16 - D2H Story


*அத்தியாயம் 06*


“கார்த்திக்கோட கூட வேல பார்க்கிற ஒரு பெண்ணோட அவனுக்குத் தொடர்பு இருந்துச்சாம். அதான் அனிதா வந்துட்டாளாம்,” என்று கீதா என்னிடம் கூறினாள்.

நாங்கள் வீட்டின் முன்னே இருந்த திறந்தவெளி முற்றத்தில் சேர்களில் உட்கார்ந்திருந்தோம். அது நெய்வேலியின் ஒரு குளிர்ந்த ஞாயிறு இரவு.

வானத்தின் கிழக்கு விளிம்புக்கு மேல் முழுநிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது. அது தன் ரோஹிணி நட்சத்திரத்துடன் நெருங்கி விளையாடிக் கொண்டிருந்தது. சாலையில் போக்குவரத்து மந்தமாகவே இருந்தது. கீதா தன்னுடைய பிடித்த நிறமான சந்தனக்கலர் சேலை அணிந்திருந்தாள்.

Monday, May 20, 2019

Chapter 05 of 16 - D2H Story


*அத்தியாயம் 05*


“உன்னோட அனுபவம் எப்படி இருந்துச்சு?” நான் அனிதாவைக் கேட்டேன்.

சற்று நேரம் அவள் என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. தன் கண்களை மூடிக்கொண்டு அந்த அனுபவத்தை மீண்டும் அசைபோட முயன்றாள்.

“மேஜிக்” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

“எனக்கு மேஜிக் தெரியாது.”

நான் சொன்னதை ஒரு பொருட்படுத்தாமல் தொடர்ந்தாள். “ஒரு மாயாஜாலம் போல இருந்தது. என்னோட ஸ்ட்ரெஸ் எல்லாம் ரிலாக்ஸாயிடுச்சு. எதையும் யோசிக்கனும்னு எனக்குத் தோணவே இல்ல. என்னோட எதிர்காலத்தப் பத்தி எந்தக் கவலையும் படல. யாரப் பத்தியுமே யோசிக்கத் தோணல. ஆனா, அது என்னங்கறது இன்னமும் எனக்குப் புரியல.”

“இதுவரைக்கும் நான் கேட்டதுலயே மிக அருமையான விளக்கம்.”

Sunday, May 19, 2019

Chapter 04 of 16 - D2H Story


*அத்தியாயம் 04*


“அங்கிள், எனக்கு ஏன் இதெல்லாம் நடக்குதுன்னு சொல்றேன்னு சொன்னீங்க” அனிதா ஞாபகப்படுத்தினாள். வெளிர் நீல நிறத்தில் சேலை அணிந்திருந்தாள். அவள் முகமும் சற்று வெளிறித்தான் இருந்தது. இருந்தாலும் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வமும் முகத்தில் தென்பட்டது.


நாங்கள் நெய்வேலியிலிருந்து ஒரு மணி நேரப் பயண தூரத்தில் இருந்த ஒரு கோவிலில் உட்கார்ந்திருந்தோம். அனிதாவை சில கோவில்களுக்கு அழைத்துச் செல்லலாம் என நான்தான் முடிவெடுத்திருந்தேன். சுவேதாவை ஆறுதல் படுத்துவதற்காக கீதா சுவேதா வீட்டுக்குச் சென்றுவிட்டாள். கோவிலுக்கு நாங்கள் வந்துசேர்ந்தபோது மாலையாகி விட்டது. அது ஞாயிற்றுக்கிழமை என்பதால் கோவிலில் நல்ல கூட்டம்.

Saturday, May 18, 2019

Chapter 03 of 16 - D2H Story



*அத்தியாயம் 03*


நான் ராமன் வீட்டுக்குச் சென்றபோது அவர் வீட்டுக்கு வெளியே பதட்டமாக நின்றுகொண்டிருந்தார். என்னைக் கண்டதும் விரைந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டார். அவர் நிறைய அழுதிருக்க வேண்டும். அவர் கண்களில் தூக்கத்தின் சாயலே தெரியவில்லை.

“விக்னேஷ் ...” அதற்குமேல் வார்த்தைகள் எழும்பவில்லை.

“கீதா பேசினா. அனிதா எங்க?”

ராமன் என்னை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

“நாங்க யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்ல. எங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குது?” கிச்சனிலிருந்து சுவேதாவின் விசும்பலைக் கேட்க முடிந்தது.

“அழாதீங்க. எல்லாம் சீக்கிரமே சரியாப் போயிடும்” கீதாவின் ஆறுதல் வார்த்தைகள் தொடர்ந்தன.

Friday, May 17, 2019

Chapter 02 of 16 - D2H Story


*அத்தியாயம் 02*


கிளப் செயலாளர் என்னைப் பற்றியும் நான் பேச இருந்த டாபிக் பற்றியும் சுருக்கமாக அறிமுகப்படுத்தி பேசிக்கொண்டிருந்தார். அது ஒரு நூறு பேர் போல அமரக்கூடிய லெக்சர் ஹால். அது பாதிக்கு மேல் காலியாக இருந்தது. இந்த மாதிரி சுவாரஸ்யமில்லாத டாபிக்கைக் கேட்க யார் வருவார்கள்?

வந்தவர்களும் கூட ஆர்வத்தில் வந்திருப்பார்கள் என்று உறுதியாக சொல்வதற்கில்லை. அது ஞாயிற்றுக்கிழமை என்பதால் சும்மா டைம் பாஸ் பண்ணுவதற்காக சிலர் வந்திருக்கலாம். லெக்சர் முடிந்ததும் கிளபில் கிடைக்கும் இலவச லஞ்ச்சுக்காக சிலர் வந்திருக்கலாம். ஒரு சிலர் நாள் முழுவதும் தங்கள் வாழ்க்கைத் துணையின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்ப்பதற்காக வந்திருக்கலாம்.

Thursday, May 16, 2019

Chapter 01 of 16 - D2H Story


*அத்தியாயம் 01*


ராமனால் அந்த பஸ் ஸ்டாப் ஸ்டோன் பென்ச்சில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. அவர் சற்று பதற்றமாகக் காணப்பட்டார். தன்னுடைய மூக்குக் கண்ணாடியை இருபதாவது தடவையாக கையில் எடுத்து, தன் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டிருந்தார். நெற்றியில் சற்று வேர்த்திருந்ததைப் பார்க்க முடிந்தது.

அது ஒரு டிசம்பர் மாத குளிர்ந்த இரவு. பக்கத்திலிருக்கும் கிராமங்களையும் நகரங்களையும் விடவும் நெய்வேலியில் எப்போதும் ஒன்றிரண்டு டிகிரி கம்மியாகவே இருக்கும். ஆர்ச் கேட் பஸ் ஸ்டாப்பில் அந்த நேரத்தில் எங்களைத் தவிர்த்து வேறு யாரும் இல்லை. சென்னை செல்லும் பஸ்கள் அவ்வப்போது நிற்காமல் எங்களைக் கடந்து வேகமாக சென்று கொண்டிருந்தன. ஆனால், நாங்கள் சென்னையிலிருந்து வரும் பஸ் ஒன்றை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தோம். ராமன் இப்போது தன் கண்ணாடியை மீண்டும் போட்டுக் கொண்டு எழுந்து நின்றார்.

Wednesday, May 15, 2019

Welcome - D2H Story




*விரக்தியிலிருந்து நம்பிக்கைக்கு*

*நூல் அறிமுகம்*


குடும்பத்திலும் சமூகத்திலும் அலுவலகத்திலும் நாம் தினந்தோறும் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நாம் பெறும் இறையுதவிதான், நம்முடைய வாழ்க்கை அனுபவத்தரத்தை நிர்ணயிக்கிறது. மூன்றே மூன்று ஆன்மீகத் தத்துவங்களைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையில் செயல்படுத்தினால் போதும், அந்த கிடைத்தற்கரிய இறையுதவியைப் பெறுவதற்கு. அதை விதிகளாகச் சொல்வதைவிட, ஒரு கதையின் பின்புலத்தில் விளக்கினால், இன்னும் எளிதாகப் புரியும் என்று நான் நினைத்து இந்தக் கதையை எழுதினேன்.

இம்மூன்று தத்துவங்களும் ஆன்மீகத் தத்துவங்களாதலால், மதங்களுக்கு அப்பாற்பட்டவை. நீங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும் சரி, அல்லது எந்த ஒரு மதத்தையும் சேராதவராக இருந்தாலும் சரி, இம்மூன்று ஆன்மீகத் தத்துவங்களையும் உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுவதில் எந்த ஒரு தடையுமில்லை.

இக்கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. ஆனால், இக்கதையில் விவாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்மீகத் தத்துவங்களும் உண்மையானவை; நிஜ வாழ்க்கையில் கடைபிடித்தால் பயன்தரக்கூடியவை.

இது ஒரு குறுநாவல். மொத்தம் பதினாறு அத்தியாயங்கள். சுமார் ஒரு மணி நேரத்தில் முழு நாவலையும் வாசித்துவிடலாம்.

அனைத்து அத்தியாயங்களின் லிங்க்ஸைப் பார்ப்பதற்கு கீழே இருக்கும் ஹோம் பட்டனை அழுத்தவும்.

NOTE: English Version of this Story is available for free reading on Wattpad - https://www.wattpad.com/story/176571208-despair-to-hope-completed